சன் நியூஸ் நேருக்குநேர் நிகழ்ச்சியில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.,
சன் நியூஸ் தொலைக்காட்சி நேருக்கு நேர் நிகழ்ச்சியில் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.,
திரு. வீரபாண்டியனுடன் உரையாடுகிறார்.
ஹஜ் மானியம் தொடர்பான இந்நிகழ்ச்சி வரும் 19ம் தேதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு 20ம் தேதி காலை 8.30 மணிக்கும் ஒளிப்பரப்பாகிறது. காணத் தவறாதீர்.
கோட்டக்குப்பத்தில் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை
கோட்டக்குப்பத்தில் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி இன்று கோட்டக்குப்பத்தில் துவங்கியது. முதல் கட்டமாக கோட்டக்குப்பம் 2 மற்றும் 5-ம் எண் ரேசன் கடைகளில் இன்று (17-5-2012) அதிகாரிகளால் நேரிடையாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த பணி வரும் நாட்களிலும் தொடரும் என்று தெரியவருகிறது. பயனாளிகள் தங்களின் குடும்ப அட்டையை கொண்டுவந்து தங்களுக்கான மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஹஜ் மானிய விவாதம்-புதியதலைமுறை டிவி
காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான் M.P
ம.ம.க தலைவர் பேராசிரியர். ஜவஹிருல்லாஹ் M.L.A
மற்றும்
பாரதிய ஜனதா கட்சியின்
முன்னாள் தலைவர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கும் சூடான விவாதம்
குவைத் காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம்
இறையருளால் சென்ற 12-05-2012 சனிக்கிழமை இரவு 8-00 மணிக்கு மிர்காப், மன்சல்வா உணவகத்தில் குவைத் காயிதேமில்லத் பேரவையின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
பேரவையின் துணைச்செயலாளர் எருமைப்பட்டி ஹலீல் ரஹ்மான் கிராஅத்துடன் கூட்டம் தொடங்கியது. பேரவையின் தலைவர் முஹம்மது பந்தர் முஹம்மது பாரூக் தன் தலைமையுரையில் பேரவையின் வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலைகள் பற்றி விரிவாக எடுத்து கூறினார். பேரவை பொதுச்செயலாளர் வடக்கு மாங்குடி ஹாஜீ அப்துல் முத்தலிப் உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் நடைபெற இருக்கின்ற கருத்தரங்கம், மாநாடு பற்றி விளக்கி கூறினார். கெளரவத்தலைவர் திருப்பத்தூர் டாக்டர் அன்வர்பாட்சா, தன் உரையில் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார் மற்றும் தகவல் தொடர்பு செயலாளர் அய்யப்பேட்டை கம்பளி பஷீர், தலைமை ஆலோசகர் கோட்டக்குப்பம் ஹபீபுர் ரஹ்மான் ஆலோசகர் கூத்தாநல்லூர் அல்வாணி அப்துல் ரஜாக் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். பேரவையின் துணைச்செயலாளர் சத்திரமனை ஹஸன் முஹம்மது நடைபெற இருக்கின்ற கருத்தரங்கம் மற்றும் மாநாட்டு பணிகளில் நிர்வாகிகள் ஒத்துழைப்பு பற்றியும் எடுத்துரைத்தார். இறுதியாக பேரவையின் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துப்படி கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1) இன்ஷா அல்லாஹ் வரும் மே மாதம் இறுதியில் பொதுகூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்துவது என்றும்,
2) அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் மாநாடு பற்றி அனைவர்களின் ஒருமித்த கருத்தின்படி தேதி அறிவிக்கப்படும் என்றும்
3) இன்ஷா அல்லாஹ் மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் மத்திய வெளிவிவகாரத்துறை இணையமைச்சருமான மரியாதைக்குரிய அஹமது அவர்களையும், தேசிய பொதுச்செயலாளரும் மாநிலத் தலைவருமான பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களையும் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் அவர்களையும் காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச அமைப்பாளரும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரஹ்மான் எம்பி அவர்களையும் அழைப்பது பற்றி தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
அபாய ரவுண்டானா
கோட்டக்குப்பம் புதுச்சேரியை இணைக்கும் இசிஆர் புறவழிச்சாலை பணிகள் கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடைபெற்று தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. கோட்டக்குப்பம் புறாத்தோப்பு -ஜமியத் நகர் சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அமைக்கப்பட்டு வரும் ரவுண்டானாவில் புதுச்சேரியில் இருந்து கோட்டக்குப்பம் வழியாக சென்னை செல்ல புதிய இசிஆரை பயன்படுத்தும் வாகனமும், சென்னையில் இருந்து புதுச்சேரி செல்ல புதிய இசிஆரை பயன் படுத்தும் வாகனமும் ஜமியத் நகரில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவை பயன் படுத்தி கடக்கவேண்டும். அவ்வாறு செல்லும் போது புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் வாகனமும் சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனமும் ஜமியத் நகர் ரவுண்டானா அருகருகில் சந்தித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. கொஞ்சம் கவனச்சிதறல் ஏற்பட்டாலும் நிச்சயம் விபத்து ஏற்படும். ஆகையால் மேற்படி வழித்தடத்தை பயன்படுத்தும் வாகனங்களை கட்டுப்படுத்த போக்குவரத்து சிக்னல் அப்பகுதியில் அவசியம் தேவைப்படுகிறது. பிரச்சனைக்குரிய இடத்தில் சிக்னல் அமைக்குமா நெடுஞ்சாலைதுறை?

அடையாளங்களை இழந்து நிற்கும் சின்னகோட்டக்குப்பம்
கோட்டக்குப்பம் புதுச்சேரியை இணைக்கும் இசிஆர் புறவழிச்சாலை பணிகள் கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடைபெற்று தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பம் தற்பொழுது அமைக்கப்பட்டு வரும் இசிஆர் சாலையால் தன்னுடைய அடையாளத்தை இழந்து புதிய பரினாமத்தை அடைந்துள்ளது. வழக்கமாக அந்த பாதையை பயன்படுத்திவரும் வாகன ஓட்டிகள் பழக்கபட்ட அடையாளங்கள் மாற்றப்பட்டுள்ளதால் ஏதோ புதிய இடத்திற்கு வந்துவிட்டதுபோல் உணர்கிறார்கள். இசிஆர் -சின்னகோட்டக்குப்பம் சந்திப்பில் விபத்துகளை தவிற்க அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் பொருத்துவது மிகவும் அவசியம். செய்யுமா நெடுஞ்சாலைதுறை?
அதிகாரபூர்வமாக திறக்காமலே பிசியான புதிய இசிஆர்
கோட்டக்குப்பம் புதுச்சேரியை இணைக்கும் இசிஆர் புறவழிச்சாலை பணிகள் நிறைவடையும் நிலை உள்ளது. இருந்தாலும் இன்னும் பாதுகாப்பு பணிகள் நிறைவடையாமல் தற்பொழுது நடைபெற்றுவருகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரபூர்வமாக திறக்கப்படாத நிலையில் தற்பொழுது சென்னை - புதுச்சேரி, புதுச்சேரி-சென்னை செல்லும் வானங்களில் சுமார் 80 சதவிகித வாகனங்கள் வேலை நடைபெற்று வரும் புதிய இசிஆர் சாலையை பயன்படுத்தி வாகனம் ஓட்டி வருகிறார்கள். மேலும் உள்ளுர் வாசிகளும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும் இந்த சாலையையே பயன்டுத்தி வருகிறார்கள். இதனால் அரசு மக்களுக்கு அற்பணிக்காமலே மக்களே மேற்படி சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். தனியார் வாகனங்கள் மட்டுமல்லாமல் அரசு பேருந்துகளும். புதுச்சேரி பல்கலை கழக வாகனம், பொறியியல் கல்லூரி, சட்ட கல்லூரி வானங்களும் புதிய சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். அதிகாரப்பூர்வமாக திறக்கப்படாமலே மிகவும் பிசியாகிவிட்ட மேற்படி சாலையின் பணிகளை மேலும் வேகம் கூட்டி மக்களின் பயன்பாட்டிற்கு பாதுகாப்புடன் விரைவில் திறந்து விட வழிவகுக்கவேண்டும்.
கோட்டக்குப்பத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தீவிரம்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நாடுமுழுவதும் நடைபெற வேண்டும் என்ற அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. அதன்படி கோட்டக்குப்பம் பகுதியில் சாதிவாரி கணக்கெடுக்கும் பணி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஒரு ஆசிரியருக்கு ஒரு கணிணி இயக்குபவர் உதவியுடன் மக்கள் தெரிவிக்கும் தகவல்களை உடனுக்குடன் கணிணியில் பதியப்பட்டு தகவல் பதிந்ததற்கான ஒப்புகைசீட்டு வழங்க்கப்பட்டு வருகிறது.
அதன்படி சின்னகோட்டக்குப்பம் பகுதியில் ஒருவீட்டில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் மற்றும் கணிணி பொறியாளர்மற்ற கட்டுரைகள்...
- புதிய முயற்சி - பொறுப்புடன் கலந்துக்கொள்வோம்.
- மாணவி சாஜீ பானு சாதனை
- பாபர் மஸ்ஜீத் தகர்ப்புக்கு யார் காரணம்?
- +2க்கு பிறகு காத்திருக்கும் படிப்புகள்
- கோட்டக்குப்பத்தில் உழவர் பெருவிழா
- அனுமந்தை-செய்யாங்குப்பம் பள்ளிவாசல் திறப்பு விழா
- சாலை அமைத்ததில் முறைகேடு-அன்வர் பாஷா
- அறிய முயற்சி ஆதரவு கொடுப்போம்!
- உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!
- குர்ஆன் பிரதி எரிப்பு-முஸ்லிம் லீக் கண்டனம்
- சுதந்திரத் தொழிலாளர் யூனியன் (எஸ்.டி.யு.) மே தின வாழ்த்து
- சாதிவாரி கணக்கெடுப்பில் விழுப்புடன் செயல்படுவோம்.
- அன்பான வேண்டுகோள்!
- சாலை அமைக்கும்போது தகராறு - பரகத் நகரில் பரபரப்பு
- வட்டியில்லா கல்வி கடன்! வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
- இலங்கையில் புத்த பிக்குகளால் பள்ளிவாசல் சேதம்
- அகில இந்திய இளைஞர் முஸ்லிம் லீக் மாநாடு
- முஸ்லிம் லீக்கிற்கு இவ்வளவு அமைச்சர்களா - தினமலர் புலம்பல்
- ஜூலை 14, 15-ல் அகில இந்திய யூத் லீக் மாநாடு
- மக்கள் எதிர்ப்பிற்கிடையே வீடுகள் அகற்றல்
பக்கம் 1 / 26
M.P SPEECH


Ameer Builders,
132, M.G. Road,
Kottakuppam.
Comments

Who's Online
நீங்கள் சொன்னவை
- மக்களின் போராட்டம் தொடரும் More...
- 108 ஆம்புலன்ஸ் சேவையை மாண்புமிகு புதுவை முதலமைச்சர் திரு. ரங்கசாமி துவங்கி வைத்த... More...
- நெசல் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு நான் துஆ செய்கிறேன். இப்படிக்கு சமூக நலன் கர... More...
- Good news..... Thank you for your effort. You should followup the news otherwise... More...
- இது ஒரு நல்ல செய்தி! இந்த செய்தியை அனைவரும் படிக்க வேண்டும்.... இப்படிக்கு சமுக ... More...
- Good news.... More...
- Really your are doing fantastic job,this kind of complaints meany peoples are fa... More...
- உங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடக்க என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் நண்பன் க... More...
- உங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடக்க என்னுடைய வாழ்த்துக்கள்! இவன் உங்கள் நண்... More...
- கோட்டக்குப்பம் பரகத் நகர் பிரச்னையை சுட்டி காட்டியதற்கு நன்றி! இவன் உங்கள் நண்ப... More...
Latest News
- சன் நியூஸ் நேருக்குநேர் நிகழ்ச்சியில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.,
- கோட்டக்குப்பத்தில் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை
- ஹஜ் மானிய விவாதம்-புதியதலைமுறை டிவி
- குவைத் காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம்
- அபாய ரவுண்டானா
- அடையாளங்களை இழந்து நிற்கும் சின்னகோட்டக்குப்பம்
- அதிகாரபூர்வமாக திறக்காமலே பிசியான புதிய இசிஆர்
- தமிழ்நாடு ஹஜ் குலுக்கல்
- கோட்டக்குப்பம் ரப்பானிய்யா பட்டமளிப்பு விழா - அப்துல் ரஹ்மான் MP பங்கேற்பு
- கோட்டக்குப்பத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தீவிரம்
- சமுதாய விடியல் எப்போது?
- புதிய முயற்சி - பொறுப்புடன் கலந்துக்கொள்வோம்.
- மாணவி சாஜீ பானு சாதனை
- பாபர் மஸ்ஜீத் தகர்ப்புக்கு யார் காரணம்?
- +2க்கு பிறகு காத்திருக்கும் படிப்புகள்
- கோட்டக்குப்பத்தில் உழவர் பெருவிழா
- அனுமந்தை-செய்யாங்குப்பம் பள்ளிவாசல் திறப்பு விழா
- சாலை அமைத்ததில் முறைகேடு-அன்வர் பாஷா
- அறிய முயற்சி ஆதரவு கொடுப்போம்!
- உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!
- குர்ஆன் பிரதி எரிப்பு-முஸ்லிம் லீக் கண்டனம்
- சுதந்திரத் தொழிலாளர் யூனியன் (எஸ்.டி.யு.) மே தின வாழ்த்து
- சாதிவாரி கணக்கெடுப்பில் விழுப்புடன் செயல்படுவோம்.
- அன்பான வேண்டுகோள்!
- சாலை அமைக்கும்போது தகராறு - பரகத் நகரில் பரபரப்பு
- வட்டியில்லா கல்வி கடன்! வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
- இலங்கையில் புத்த பிக்குகளால் பள்ளிவாசல் சேதம்
- அகில இந்திய இளைஞர் முஸ்லிம் லீக் மாநாடு
- அகில இந்திய இளைஞர் முஸ்லிம் லீக் மாநாடு
- முஸ்லிம் லீக்கிற்கு இவ்வளவு அமைச்சர்களா - தினமலர் புலம்பல்
Popular News
- IUML Kottakuppam - Welcome to Indian Union Muslim League, Kottakuppam Website
- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
- கோட்டக்குப்பம் புதிய இணைய தளம்
- சற்றே திரும்பி பார்ப்போம்
- அப்துல் ரஹ்மான் பணிகள்
- கோட்டக்குப்பம் பேரூராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் இறுதி பட்டியல்
- ஹஜ் நல்லெண்ணக் குழுவிற்கு வரவேற்பு
- திரைப்படத்தில் சொன்ன அத்திப்பட்டிப்போல் கோட்டக்குப்பம் காணவில்லை!
- கோட்டக்குப்பம்-புதுச்சேரியை தானமாக எடுத்துக்கொண்ட தானே புயல்
- கோட்டக்குப்பம் பேரூராட்சி தேர்தலில் வார்டு பதவிக்கு போட்டியிடுபவர்களின் இறுதி பட்டியல்
- கண்ணாடிகள் கவனம். M அப்துல் ரஹ்மான் M.P.
- தமிழக முதல்வருடன் ராபியத்துல் பஷீரியா சந்திப்பு
- testing
- தியாகத் திருநாளில் கொடியேற்றும் நிகழ்ச்சி
- வெள்ளத்தில் பர்கத் நகர்
- வெள்ளத்தில் மிதக்கும் கோட்டகுப்பம்
- பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் பேரூராட்சி தலைவி
- கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவி பதவி ஏற்பு விழா. .
- தக்காளியில் அல்லாஹ் என அரபு எழுத்து
- jamiya masjid














